வாங்க எங்க ஊருக்கு என் சிறு பிராயத்தில், ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் , என் தாய் பிறந்த கிராமத்துக்கு செல்வது வழக்கம். கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரப் பயணம். எங்கள் ஊரை நெருங்கிவிட்டோம் என்று, வயல் வெளியும், நீரோடைகளும் அறிவுறுத்தும். நன்கு அகண்ட நீரோடை, இரு கரைகளிலும் உயர்ந்த தேக்கு மரங்கள். ஊர் நெருங்க நீரோடை சுருங்கிப் போகும். எங்கள் ஊர் பயண வருகை தகவல்,ஒரு வாரம் முன்பே என் தந்தை என் தாத்தா விற்கு கடிதம் மூலம் தெரிவித்து விடுவார். நான்கு தாய்மாமன்கள், எல்லாம் அருகருகே வசிப்பர், அந்த ஊரில் உள்ள வீடுகள் அவர்கள் பங்காளிகள். மொத்தத்தில் ஊரே சொந்தங்கள் தான். பேருந்து அக் குக்கிராமம் செல்லாது, மெயின் ரோட்டிலேயே இறங்கிவிடுவோம். எங்களுக்காக பேருந்து நிறுத்தத்திலேயே கூண்டு வண்டியோடு எங்கள் சின்ன மாமா காத்திருப்பார். எனக்கு நினைவு தெரிந்தவரை விடியற்காலை இறங்குவோம், மாடுகளை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைக்கோலை போட்டு, அந்த கூண்டு வண்டியிலேயே என் மாமா உறங்குவார் போலும். அந்த கூண்டு வண்டியை பற்றி கூற வ
A Blog To Publish My Feels . . .