ONE DAY TRIP நான் தற்போது பகிர்வது , என் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். அப்போது எனக்கும் என் கணவருக்கும் 9 -6 PM பணி நேரம். என் இரு மகன்களும், நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். அவர்களுக்கு சரியாக எட்டே முக்கால் மணிக்கு பள்ளி வாகனம் வந்துவிடும். நங்கள் நான்கு குடித்தனம் உள்ள ஒரு காம்பவுண்ட் குடியிருப்பில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து சில அடிகள் நடந்து ஓர் சிறிய பெட்டிக்கடை அருகே அவர்களை நிறுத்துவிட்டு , நானும் என் கணவரும் எங்கள் பணிக்கு செல்வது வழக்கம். அன்று வழக்கம் போல் கிளம்பி காலை டிபன் மதியம் LUNCH பாக்ஸ் நால்வருக்கும் பேக் செய்து, மாலையில் நான்கு மணிக்கு வரும் அவர்களுக்கு SNACKS எடுத்து வைத்து விட்டு, மாலையில் வந்து அவர்கள் ஏதுவாக எடுத்துக் கொள்ள வசதியாக வீட்டு சாவியை வழக்கம் போல் ஒளித்து வைத்து விட்டு, அவர்களை அந்த பெட்டிக்கடை அருகே நிறுத்தி விட்டு நாங்கள் சென்றோம். ஆனால் அன்று அவர்கள் மனதில் வேறு ஒர
A Blog To Publish My Feels . . .