நான் சந்தித்த மனிதர்கள் பயம் களைவாய் மகனே நான் ஒரு தனியார் மேல்நிலை பள்ளியில், ஆசிரியராக பணியாற்றி வந்தேன். அந்த சமயத்தில் நடந்த ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்நிகழ்வு தற்போது பயிலும் 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்க்கும், பெற்றோர்களுக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். அது ஒரு பெரிய தனியார் பள்ளி, 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தனியாக ஒரு Block. எந்தவித இடையூறு இல்லாமல் தனியாக இருக்கும். அந்த சமயம் தனியார் பள்ளிகளுக்கு நடுவே 1௦ மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் , எந்த பள்ளி முதலிடம், அப்பள்ளியின் பெயர் தொலைகாட்சியில் இடம்பெற வேண்டும் என்ற பலத்த போட்டி நிகழும். அதனால் பள்ளி நிர்வாகம் , மேல்நிலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்க்கு மிகுந்த அழுத்தம் கொடுப்பது வழக்கம். அதுவும் அந்த பள்ளி நிறைய மாணாக்கர்களை கொண்ட பள்ளி. ஆதலால் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒவ் வொரு வருடமும் பெரிய challenging காண வருடமாக இருக்கும். நன
A Blog To Publish My Feels . . .