Skip to main content

Posts

Showing posts from March, 2023

புண்ணிய ஆத்மா

                  புண்ணிய ஆத்மா               கால்கள் நழுவி ஒரு பெரிய பள்ளத்துக்குள் விழுந்த உணர்வு வர, கால்கள் தன்னை மறந்து ஆடியதோடு அல்லாமல் உடம்பும் குப்பென்று வேர்த்தது. கண் முழித்த கோவிந்தராஜன் , தான் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதை உணர்ந்து சட்டென்று கண்களை திறந்தார். நல்ல வேலை அது கனவு.                நெற்றியில் ஏற்றி விட்ட கண்ணாடியை எடுத்து பொறுமையாக மடித்து, அதன் உறையில் வைத்தார். தன நெஞ்சினில் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மூடி, அருகில் வைத்து, நல்ல வாட்டமாக சாய்ந்தார். ஒரு 60 வயது மதிக்க தக்க உருவம், மாநிறம், சற்று பூசிய தேகம், தலையில் நரையை விட வழுக்கை அதிக இடத்தை பிடித்திருந்தது. பளிச்சென்று துவைத்த கை வைத்த பனியன், வெள்ளை வேஷ்டி, எப்போதும்   நெற்றியில் விபூதி கீற்று, அதன் நடுவே ஒரு சிறிய குங்குமப் பொட்டு.              அந்த குங்குமப் பொட்டும் அவரது மனைவிக்காக.” ஏங்க, வெறும் விபூதி மட்டும் பூசாதீங்க, நடுவில் கொஞ்சம் குங்குமம் வைங்க, அது உங்களுக்கு நல்லா   இருக்கும், இருங்க நா வைச்சி விடறேன்”, என்று கூறி மிகவும் கவனத்தோடு குங்குமப் பொட்டு   வைப்பாள் வத்

சுட்டிப் பையன் சுமேஷ்

                  சுட்டிப் பையன் சுமேஷ்                  நான் முதல்வராக இருந்த பள்ளியில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம். இது ஒரு சிறு சுட்டி பையன் சுமேஷ் என்பவனைப் பற்றியது.                 சுமேஷ் LKG யில் படித்துக் கொண்டிருந்தான். மிகவும் சுட்டி, ஆனால் பள்ளிக்கு வரும்போதே அழுதுக் கொண்டே தான் வருவான். வந்து ஒரு இரண்டு மணி நேரம் கழித்து, தன் சக நண்பர்களுடன் பேசி சகஜமாகிவிடுவான். அவன் ஒரு குறிப்பிட்ட இரு நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு மற்றவர் SNACKS யை சாப்பிடுவதும் , மதிய நேரத்தில் தூங்கும் பிள்ளைகளை சீண்டுவதையும் வழக்கமாக கொண்டான்.                வகுப்பளவில் வகுப்பாசிரியரே கண்டித்து வந்திருக்கிறார். இவர்கள் குறும்பு எல்லை மீறவும் பாதித்த குழந்தைகளின் பெற்றோரே   என்னிடம் வந்து முறையிட தொடங்கினர். விசாரிக்கலாம், அதற்கு முன்பு வகுப்பாசிரியரை ஒரு முறை கேட்கலாம் என்று எண்ணி , அவரை அழைத்து விசாரித்தேன். அவரும் ஆமோதித்தார். அவர் என்னிடம், “ மேம்   நீங்க STUDENTS இடம்   வந்து பொதுவா கண்டித்து செல்லுங்கள்”, என்றார்.                 இப்போது தான் அழுகையை நிறுத்தி பள்ளிக்கு வர ஆரமித்துள்ளார

களவும் கற்று மற

                                    களவும் கற்று மற                      இந்த தலைப்பிற்கான விரிவாக்கம், திருட்டு தொழிலை கூட கற்றுக் கொண்டு, மறந்து விடு என்பதே ஆகும்.                     இந்த தலைப்பின் மூலம் , நான் உணர்த்த விரும்புவது , தீய செயல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அப்போது தான் இந்த உலகில் நாம் வாழ முடியும். மிகவும் நல்லவர்களாகவும், தீய செயல்கள் பற்றி அறியாமல் இருப்பதால், இவ்வுலகில் அனுதினமும் எதாவது ஒரு வகையில் சூழ்ச்சியில் மாட்டி ஏமாற வாய்ப்புகள் அதிகம்.                      தீய செயல்களை அறிந்து கொள்ளுதல் அவசியம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், எப்படி cunning காக யோசிக்கிறார்கள், எப்படி இடத்திற்கு தகுந்தாற்   போல் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள், என்று அறிந்திருத்தல் அவசியம்.                     “எனக்கு இவையெல்லாம் தெரியாது, நான் நல்ல விஷயங்கள் பார்த்தே வளர்ந்துவிட்டேன்”, என்று சொல்லிக் கொள்வது பெருமையல்ல. அதற்கு,” நான் ஏமாளி,” என்ற பலகையை கழுத்தில் மாட்டிக் கொள்வது மேல்.                      நாம் அதற்காக தீய செயல்களை செய்யலாம், என்று அர்த்தமில்லை. நெர

நான் பார்த்து வியந்த வீரப் பெண்மணி இருளாயி

             நான் பார்த்து வியந்த வீரப்பெண்மணி                      இருளாயி                   மதுரை அருகே ஒரு கிராமம், அந்த கிராம ரோட்டிலிருந்து ஒரு சிறு கிளை, வாய்க்கால்   ஒட்டிய பாதை. ஓரு குக்கிராமத்திற்கு அழைத்து செல்லும். இரு புறமும் வயல்கள், அதுவும் முப்போகம் விளையும் நிலங்கள்.                   அக்கிரமத்திற்கு முதலில் நான் சென்ற போது.” நீங்க எதுக்கும் இருளாயியை போய் பாருங்கள்”, என்றனர். ஒரு சந்துக்குள் சென்று ஒரு சிறு பெட்டிக்கடை போல் உள்ள இடத்தை அடைந்தேன். அதன் இரு புறமும் சிமெண்ட் மேடை, கூரை வேய்ந்த காத்தோட்டமான இடம்.                    வெயிலுக்கு இதமாக இருந்தது, உட்க்கார்ந்த அடுத்த கணம் குடிக்க ஒரு குட்டை பாவாடை, சட்டை போட்ட ஒரு பெண்   சொம்பில் குடிநீருடன்   வந்தாள், “இந்தாங்க அக்கா, இத குடிங்க நான் ஆத்தாவ கூப்பிடுறேன்”, என்றப்   படி பதிலுக்கு எதிர்பார்க்காமல் ஓடினாள்.                     சொம்போடு சுற்றிப் பார்த்தேன் ஆங் ஆங்கே கூரை மற்றும் ஓட்டு வீடுகள், என்னைப் பார்த்ததும்,” இருளாயியை பார்க்க வந்தீங்களா?”, என்று கேட்டப் படி சென்றனர். நான் அவர்கள் கொடுத்த பில்ட் அப்ப

மனிதம் காப்போம்

               மனிதம் காப்போம்                 மனிதம் என்பது , நம் பகுத்தறிவின் மூலம் சிந்தித்து செயல்படும் தன்மை. பிற மனித வாழ்விற்கு நாம் நம்மை பயனுள்ள வகையில் இருத்திக் கொள்வதே,  தலைப்புக்கான அர்த்தம்.                 சுருக்கமா சொல்லனும்னா , நம்மை பிறர் எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோமோ, அது போல் நாமும் பிறரை எதிர் கொள்ள வேண்டும். முதல் பத்தியில் , “ பிற மனித வாழ்விற்கு நான் நம்மை பயனுள்ளதாக...... என்ற வாக்கியத்தை மறந்து விடுவோம், காரணம் முதல் வரியை செயல் படுத்த முயலுவோம், பின்பு அதை பார்க்கலாம். இந்த மனிதம் என்பதை பின்பற்றுகிறோமா என்பதைப் பற்றி பார்ப்போம்.                 நம் வீட்டில் உள்ள ரத்த பந்தங்கள், உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்- இவர்கள் அனைவரிடத்தும் நாம் மனிதம் காக்கிறோமா?. இல்லை என்று தான் சொல்வேன் , நான் உட்பட.                 நாம் முன்பு நம் பெற்றோர்கள் வாழ்ந்த காலத்தை நினைத்துப் பார்ப்போம் , பெரிய கூட்டு குடும்பம், சுற்றி சொந்த பந்தங்கள், நல்லது கெட்டது என்றால் நாட்கள் கணக்கில் அவர்களோடு பயணிக்க நேரிடும், பரஸ்பர உதவி, குடும்ப பாரம்பரியம், குலம்

என் தங்கத்துக்கு ஒரு தாலாட்டு

        என் தங்கத்துக்கு ஒரு தாலாட்டு          கண்ணே ,என் கனியமுதே !          கட்டிக்   கரும்பே கவலையின்றி          கண்மூடி உறங்கு          காலம் நிறைய கிடக்கு          கண்ணீர்விட – இப்போது           கவலை கலைந்து கண்ணுறங்கு. - உன்          துயரம் துடைக்க நான்          துணையிருப்பேன் துவளாதே          துணிவுடன் செயல்பட காலம் கிடக்கு          துயில் கொள்வாய் என் தூரிகையே.- உன்          தொடர்வண்டி பயணத்தில்          தொல்லைகள் பல காத்திருக்கு- அதில்          தொலைந்து போகாமல் இருக்க நான்          தொடர்ந்து வருவேன்          தூங்கு என் மயிலிறகே .           அத்தை அடித்தாளோ , மாமன் அடித்தானோ          தாத்தா , பாட்டி அடித்தார்களோ- என்று          தாலாட்டு பாட விரும்பவில்லை- காரணம்          யாரும் துனண   வர மாட்டார்கள்- ஆதலால்          தாய் நான் சொல்கிறேன் அயர்ந்து          தூங்கு என் ஆசை மகளே.           பள்ளி செல்லும் காலம் வரும்,          பல துன்பங்கள் தேடி வரும்,          பயந்து விடாதே, பல         பருந்துகளிடமிருந்து உன்னை நீயே         பாதுகாத்