புண்ணிய ஆத்மா கால்கள் நழுவி ஒரு பெரிய பள்ளத்துக்குள் விழுந்த உணர்வு வர, கால்கள் தன்னை மறந்து ஆடியதோடு அல்லாமல் உடம்பும் குப்பென்று வேர்த்தது. கண் முழித்த கோவிந்தராஜன் , தான் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பதை உணர்ந்து சட்டென்று கண்களை திறந்தார். நல்ல வேலை அது கனவு. நெற்றியில் ஏற்றி விட்ட கண்ணாடியை எடுத்து பொறுமையாக மடித்து, அதன் உறையில் வைத்தார். தன நெஞ்சினில் கவிழ்த்து வைத்திருந்த புத்தகத்தை எடுத்து மூடி, அருகில் வைத்து, நல்ல வாட்டமாக சாய்ந்தார். ஒரு 60 வயது மதிக்க தக்க உருவம், மாநிறம், சற்று பூசிய தேகம், தலையில் நரையை விட வழுக்கை அதிக இடத்தை பிடித்திருந்தது. பளிச்சென்று துவைத்த கை வைத்த பனியன், வெள்ளை வேஷ்டி, எப்போதும் நெற்றியில் விபூதி கீற்று, அதன் நடுவே ஒரு சிறிய குங்குமப் பொட்டு. அந்த குங்குமப் பொட்டும் அவரது மனைவிக்காக.” ஏங்க, வெறும் விபூதி மட்டும் பூசாதீங்க, நடுவில் கொஞ்சம் குங்குமம் வைங்க, அது உங்களுக்கு நல்லா இருக்கும், இருங்க நா வைச்சி விடறேன்”, என்று கூறி மிகவும் கவனத்தோடு குங்குமப் பொட்டு வைப்பாள் வத்
A Blog To Publish My Feels . . .