நான் சந்தித்த மனிதர்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் நம் வாழ்க்கைப் பயணத்தில், நாம் பல் வேறு மனிதர்களை சந்திக்கின்றோம். சில பேர் நமக்கு நல்ல பாடத்தை புகட்டுவர். அதாவது இவரைப் போல் இருக்க வேண்டும் அல்லது இவரைப் போல் இருக்க கூடாது என்று. அது போல் நான் சந்தித்த சில மனிதர்களை நான் இங்கு உங்களுடன் பகிர உள்ளேன். நான் முதல்வராக பணிபுரிந்த பள்ளியின் பெற்றோர் அவர். நன்கு படித்து ஒரு நல்ல பதவியில் இருப்பவர், அவருடைய மனைவியும் நல்ல பதவியில் உள்ளார். அந்த நபர் மிகவும் அமைதியானவர், நான் சில சமயங்களில் நினைத்ததுண்டு “எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது, சிரித்த முகத்துடன் எதிர் கொள்ள முடிகிறது என்று. நமக்கு சாதகமான விஷயமோ அல்லது இல்லையோ எது என்றாலும் சட்டென்று ரியாக்ட் செய்ய மாட்டார். அந்த விஷயத்தை நன்கு உள் வாங்கி process செய்து பின்பு ரியாக்ட் செய்வார். நம்மால் இயலவில்லையே, வடிவேல் கூறுவது போல் ,” நமக்கு இன்னும் பயிற்சி வேண
A Blog To Publish My Feels . . .