களவும் கற்று மற இந்த தலைப்பிற்கான விரிவாக்கம், திருட்டு தொழிலை கூட கற்றுக் கொண்டு, மறந்து விடு என்பதே ஆகும். இந்த தலைப்பின் மூலம் , நான் உணர்த்த விரும்புவது , தீய செயல்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அப்போது தான் இந்த உலகில் நாம் வாழ முடியும். மிகவும் நல்லவர்களாகவும், தீய செயல்கள் பற்றி அறியாமல் இருப்பதால், இவ்வுலகில் அனுதினமும் எதாவது ஒரு வகையில் சூழ்ச்சியில் மாட்டி ஏமாற வாய்ப்புகள் அதிகம். தீய செயல்களை அறிந்து கொள்ளுதல் அவசியம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், எப்படி cunning காக யோசிக்கிறார்கள், எப்படி இடத்திற்கு தகுந்தாற் போல் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள், என்று அறிந்திருத்தல் அவசியம். “எனக்கு இவையெல்லாம் தெரியாது, நான் நல்ல விஷயங்கள் பார்த்தே வளர்ந்துவிட்டேன்”, என்று சொல்லிக் கொள்வது பெருமையல்ல. அதற்கு,” நான் ஏமாளி,” என்ற பலகையை கழுத்தில் மாட்டிக் கொள்வது மேல். நாம் அதற்காக தீய செயல்களை செய்யலாம், என்று அர்த்தமில்லை. நெர
A Blog To Publish My Feels . . .