நான் சந்தித்த மனிதர்கள் சில நேரங்களில் சில மனிதர்கள் நம் வாழ்க்கைப் பயணத்தில், நாம் பல் வேறு மனிதர்களை சந்திக்கின்றோம். சில பேர் நமக்கு நல்ல பாடத்தை புகட்டுவர். அதாவது இவரைப் போல் இருக்க வேண்டும் அல்லது இவரைப் போல் இருக்க கூடாது என்று. அது போல் நான் சந்தித்த சில மனிதர்களை நான் இங்கு உங்களுடன் பகிர உள்ளேன். நான் முதல்வராக பணிபுரிந்த பள்ளியின் பெற்றோர் அவர். நன்கு படித்து ஒரு நல்ல பதவியில் இருப்பவர், அவருடைய மனைவியும் நல்ல பதவியில் உள்ளார். அந்த நபர் மிகவும் அமைதியானவர், நான் சில சமயங்களில் நினைத்ததுண்டு “எப்படி இவ்வளவு அமைதியாக இருக்க முடிகிறது, சிரித்த முகத்துடன் எதிர் கொள்ள முடிகிறது என்று. நமக்கு சாதகமான விஷயமோ அல்லது இல்லையோ எது என்றாலும் சட்டென்று ரியாக்ட் செய்ய மாட்டார். அந்த விஷயத்தை நன்கு உள் வாங்கி process செய்து பின்பு ரியாக்ட் செய்வார். நம்மால் இயலவில்லையே, வடிவேல் கூறுவது போல் ,” நமக்கு இன்னும் பயிற்சி வேண
ONE DAY TRIP நான் தற்போது பகிர்வது , என் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம். அப்போது எனக்கும் என் கணவருக்கும் 9 -6 PM பணி நேரம். என் இரு மகன்களும், நான்கு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வந்தனர். அவர்களுக்கு சரியாக எட்டே முக்கால் மணிக்கு பள்ளி வாகனம் வந்துவிடும். நங்கள் நான்கு குடித்தனம் உள்ள ஒரு காம்பவுண்ட் குடியிருப்பில் வசித்து வந்தோம். எங்கள் வீட்டிலிருந்து சில அடிகள் நடந்து ஓர் சிறிய பெட்டிக்கடை அருகே அவர்களை நிறுத்துவிட்டு , நானும் என் கணவரும் எங்கள் பணிக்கு செல்வது வழக்கம். அன்று வழக்கம் போல் கிளம்பி காலை டிபன் மதியம் LUNCH பாக்ஸ் நால்வருக்கும் பேக் செய்து, மாலையில் நான்கு மணிக்கு வரும் அவர்களுக்கு SNACKS எடுத்து வைத்து விட்டு, மாலையில் வந்து அவர்கள் ஏதுவாக எடுத்துக் கொள்ள வசதியாக வீட்டு சாவியை வழக்கம் போல் ஒளித்து வைத்து விட்டு, அவர்களை அந்த பெட்டிக்கடை அருகே நிறுத்தி விட்டு நாங்கள் சென்றோம். ஆனால் அன்று அவர்கள் மனதில் வேறு ஒர